வீடுகள் கையளிக்கும் ஆரம்ப நிகழ்வு





அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை.கோமரங்கடவெல சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் 2016ம் ஆண்டிற்கு நிர்மாணிக்கப்ட்ட வீடுகள் கையளிக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை (10) ரொட்டவெவயில் இடம்பெற்றது.

கோமரங்கடவெல சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி கேணல் என்.ஜி.திலகரெட்ண தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சிவில் பாதுகாப்பு திணைக்கள சேவா வணிதா ஏக்ககய அமைப்பின் தலைவி லக்ஸ்மி பல்லேகம பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

2016ம் ஆண்டு கோமரங்கடவெல பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 பேருக்கு 10 இலச்சம் பெறுமதியான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இன்னும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து வருபவர்களுக்கு பல வீடுகளை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப்பள்ளி வாசல் தலைவர் மௌலவி அப்துல்சத்தார் மற்றும் முன்னாள் மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைசர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -