7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 22 வயது வாலிபன்..!

மிழ்நாட்டில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. சென்னை போரூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியின் உடல் மாங்காடு பகுதிக்கு அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இக்கொடூர செயலில் ஈடுபட்ட ஜஸ்வந்த என்ற 22 வயது பொறியாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஹாசினி கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்து ஹாசினியை தேடி வந்தனர். இந்நிலையில், குடியிருப்பில் விசாரணை மேற்கொண்டு பொலிசார், ஜஸ்வந்த்திடம் விசாரணை மேற்கொள்ள அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஜஸ்வந்த் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து தலையணையால் முகத்தில் அழுத்தி கொன்று, உடலை மாங்காடு அருகே பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மாங்காடு பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த சிறுமியின் உடலை பொலிசார் மீட்டுள்ளனர்.

குடியிருப்பில் வைத்து ஜஸ்வந்த்தை பொலிசார் கைது செய்தபோது அங்கிருந்து மக்கள் அவரை கடுமையாக தாக்கினர். ஜஸ்வந்த்தை மக்களிடமிருந்து மீட்ட பொலிசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ல.ஸ்ரீ
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -