ஜே.எப்.காமிலா பேகம்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீயாங்குளம் பகுதியில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (8) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கிண்ணியடி மைதான வீதியைச் சேர்ந்த, வினாயகம் தனா பிரியன் (22வயது) என்ற, திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையாகிய நபரே இவ்வாறு மரணமடைந்த நபர் ஆவார். இந்நபரின் வலது காலில் இரத்தம் படிந்த கறைகள் காணப்படுவதாகவும், அருகில் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியும் காணப்படுவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.