திருகோணமலை சம்பூரில் ஏழு கக்கப்பட்டாசை வைத்திருந்த 17 வயது சிறுவன் விளக்கமறியலில்

எப்.முபாரக்-

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏழு கக்கப்பட்டாஸ் (வாய்வெடி) வெடிபெருளை வைத்திருந்த பதினேழு வயதுடைய சிறுவனை இம்மாதம் 23 ஆம் திகதி வரை சிறுவர்களை தடுத்து வைத்திருக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார். சந்தோசபுரம்,கடற்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 குறித்த நபர் சந்தோசபுரம் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது ஏழு வாய்வெடி (கக்கப்பட்டாஸ் )சை கொண்டு சென்ற போது கைது(9) செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -