திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏழு கக்கப்பட்டாஸ் (வாய்வெடி) வெடிபெருளை வைத்திருந்த பதினேழு வயதுடைய சிறுவனை இம்மாதம் 23 ஆம் திகதி வரை சிறுவர்களை தடுத்து வைத்திருக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை (10) உத்தரவிட்டார். சந்தோசபுரம்,கடற்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சந்தோசபுரம் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது ஏழு வாய்வெடி (கக்கப்பட்டாஸ் )சை கொண்டு சென்ற போது கைது(9) செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.