அவசர சட்டத்தின் மூலம் மிருகவதை தடைச்சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தும் விதத்தில் மாநில அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார். இதில் முக்கிய அம்சம் என்னவென்று, இன்று மாலை வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், மிருகவதை தடைச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு தடை உடனடியாக நீங்குகிறது என கூறப்பட்டுள்ளது. எனவே இந்த சட்ட முன்வரைவை சட்டசபையில் நிறைவேற்றினால் இது நிரந்தர சட்டமாகிவிடும் என மார்கண்டேய கட்ஜு போன்ற சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.