நல்லாட்சியின் இரு வருட பூர்த்தியினை முன்னிட்டு மத அனுஷ்டான நிகழ்வுகள்..!

அப்துல்சலாம் யாசீம்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து மத பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இன்று (07) காலை திருகோணமலை கோணேஸ்வரம். மற்றும் திருகோணமலை சென்மேறிஸ் தேவாலயத்திலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம்.கலைஞானசுந்தரம் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியா-

நல்லாட்சி அரசாங்கத்தின் இரு வருட பூர்த்தியினை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலாளர் என். ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் இன்று (07) மத அனுஷ்டான நிகழ்வுகள் திருகோணமலையின் பல மத வழிபாட்டுத்தளங்களிலும் இடம் பெற்றன. இதன் ஒரு கட்ட நிகழ்வாக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளமான ஆண்டான் குளம் அல் மஸ்ஜிதுல் ஹூலூர் ஜூம்ஆ பள்ளிவாயலில் ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து இப்பள்ளிவாயலின் பேஷ் இமாம் அன்வர் சதாத் (நஹ்ஜி)அவர்களினால் துஆப் பிரார்த்தனை இடம் பெற்றது. 

இதில் திருகோணமலை மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.முஸ்ஸில் உட்பட ஊழியர்கள் என பலரும் பங்கேற்று மைத்திரிபால சிரிசேன அரசுக்காக துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இன்று இரவு முழு நாள் பிரித் பாராயமும் மாவட்ட செயலகத்தில் அதிகாலை வரை இடம் பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -