மாலைதீவிலுள்ள கல்முனை மீனவர்களை நாட்டுக்கு கொண்டுவர ஹக்கீம், ஹரீஸ் நடவடிக்கை

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
மாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன கல்முனையைச்சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு என்பவற்றை நாட்டுக்குவரவழைப்பதற்கும் காணாமல் போய் கடலில் தத்தழிக்கும் ஏனைய நான்கு மீனவர்கள் மற்றும்இயந்திரப்படகு என்பவற்றை மாலைதீவு மற்றும் இந்திய கடற்படையினரின் டோரா படகுகள் மூலம்தேடுவதற்குமான நடவடிக்கையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் நடவடிக்கைஎடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி சங்க தலைவர் எம்.நசீர் உள்ளிட்ட சங்கபிரதிநிதிகள் காணாமல் போன இயந்திரப் படகு உரிமையாளர், காணாமல் போனவர்களின் உறவினர்கள்உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரைநேற்று (5) வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதற்கு அமைவாக மேற்குறித்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனையைச் சேர்ந்த இரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு மற்றும் ஆறு மீனவர்கள் கடலுக்குமீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்தனர். இவர்களுள் இருவர் மாலைதீவு கடற்படையினரால்காப்பாற்றப்பட்டு மாலைதீவு அரசின் பாதுகாப்பிலும் ஏனைய நான்கு பேர் உள்ளிட்ட படகு மாலைதீவுகடற்பரப்பை அண்மித்த பிரதேசத்தில் தத்தழிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக குறித்த குழுவினர்தெரிவித்துள்ளனர்.

இதன்போது மாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப்படகுஎன்பவற்றை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பிலும் ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப்படகினை மாலைதீவு கடற்பரப்பை அண்மித்த பிரதேசங்களிளும் இந்திய கடற்பரப்பை அண்மித்தபிரதேசங்களிளும் டோரா படகுகளின் உதவியுடன் தேடுவதற்கு பாதுகாப்பு அமைச்சுடன் பேசி நவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு மாலைதீவு நாட்டு அரச அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்;தை நடத்துவதற்காகமாலைதீவுக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -