வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்கள் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் அறியாமை காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது என பிரதியமைச்சர் அனோமா கமகே கூறியுள்ளார்.
எனவே,வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அம்பாறையில்,வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே பிரதியமைச்சர் அனோமா கமகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்,குறித்த பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது குறித்து அதற்கு பொறுப்பான அமைச்சினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் அனோமா கமகே குறிப்பிட்டுள்ளார்.