திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் மரணம்

அப்துல்சலாம் யாசீம்-

யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்த பஸ்ஸிலிருந்து மொறவெவ பகுதியில் விழுந்த வயோதிபப்பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் (10) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ.தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த பீ.பிஸோமெனிகே (70வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி செல்லவிருந்த இலங்கை போக்கு வரத்துக்கு சொந்தமான பஸ்ஸில் மயிலகுடாவ பகுதியில் ஏறிய வயோதிபப்பெண் பஸ் நிறுத்த முன்னமே பஸ்ஸை விட்டு பாய்ந்ததாகவும் அதில் படுகாயமடைந்த பெண் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

தலையில் காயமேற்பட்ட நிலையில் இரத்த கசிவு காரணமாக உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்து இன்று (10) திருகோணமலை நீதிமன்ற நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் சந்தேக நபரின் இருப்பிடத்தை உறுதிப்படுத்திய கிராம உத்தியோகத்தரின் சான்றிதலை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -