எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை தாக்கி காயமேற்படுத்திய ஒருவரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் தம்மிக்க பெரேரா நேற்று புதன்கிழமை (4) உத்தரவிட்டார். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக காணிபிரச்சினை காரணமாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணொருவரை அடித்து காயமேற்படுத்தியதாக அக்போபுர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரை நேற்று புதன்கிழமை(4) காலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
காயங்களுக்குள்ளான பெண் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.