மத்தல விமான நிலையத்தில் மாற்றம் - சந்தோசத்தில் மஹிந்த

ட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவின் தலைமைத்துவத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கு புனரமைப்பு நடவடிக்கை சீன நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதன் காரணமாக காலை 8.30 முதல் மாலை 4.30 மணி வரை விமான பயண நடவடிக்கை மத்தல விமான நிலையத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கமைய இன்றைய தினம் மத்தல விமான நிலையத்தில் பயணிகள் அதிகளவில் நிறைந்து காணப்பட்டதாகவும், அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மத்தல விமான நிலையம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்தது. பாரிய நிதி செலவீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மத்தல விமான நிலையம், பாரிய நட்டத்தை எதிர்நோக்கியிருந்தது.

விமான நிலையம் அமைந்துள்ள அமைவிடம் குறித்து விமான சேவைகள் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்திருந்தன. இதன் காரணமாக தமது விமான சேவைகளை மத்தல விமான நிலையம் ஊடாக முன்னெடுக்க மறுத்திருந்தன. இந்நிலையில் இன்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இணையாக மத்தல விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ் ஆசியாவின் ஆச்சரியமாக மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -