2016 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உ-த ) பரீட்சையின் வெளியாகிய பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மாணவி ஜாபீர் நூறூல் சிபா 3ஏ பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேற்படி கல்லூரியில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின் படி கலை பாடப்பிரிவில் மேற்குறித்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மிகவும் வறுமை நிலையில் தனது கல்வியை தொடர்ந்த இம் மாணவி பல்கலைக்கழகம் செல்வதற்கு முன்னர் எம்மவர்கள் அம்மாணவிக்கு தகுந்த உதவியை வழங்க வேண்டும் என தனிப்பட்ட முறையில் வேண்டுகின்றேன்.
![](https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif)