மனித உரிமை மீறல் தினத்தை முன்னிட்டு ஹட்டனில் பேரணி..!

க.கிஷாந்தன்-
லக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், மனித உரிமை மீறல் தினத்தையும் முன்னிட்டு கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனம் அட்டன் நகரில் பேரணி ஒன்றையும், விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்தியது.

10.12.2016 அன்று காலை ஆரம்பமான இந்த நிகழ்வில் அட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து அட்டன் அஜந்தா மண்டபம் வரை இத் தினங்களை ஞாபகமூட்டி வழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு பேரணி ஒன்று இடம்பெற்றது.

கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் நுவரெலியா பிரதேச அமைப்பாளர் பிரான்ஸிஸ் ஸ்டீபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் செட்டிக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை லெஸ்லி பெரேரா அவர்களும், மாத்தளை மறைமாவட்ட அருட்தந்தை மார்க்கஸ் கொடிபிலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பிக்கபட்ட இப்பேரணி அஜந்தா மண்டபத்தை சென்றடைந்து அங்கு பெண்கள் உரிமை மற்றும் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்களுடைய உரிமைகள் தொடர்பிலும் பெருந்தோட்ட பெண்களின் வாழ்வாதார உரிமை தொடர்பிலும் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -