வஸீமின் வாக­னத்தை பின் தொடர்ந்த கார்...!! புதிய திருப்பம்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் மேலும் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

கொழும்பு 8, விஜே­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வனம் ஒன்றில் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் மீட்­கப்­பட்ட சி.சி.ரி.வி.காணொ­ளியில் வஸீமின் வாக­னத்தை பின் தொடர்ந்து சென்ற கார் ஒன்று தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த பாரிய முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

மோட்டார் வாகனத் திணைக்­க­ளத்தின் உத­வி­யுடன் பொலிஸார் முன்­னெ­டுத்த குறித்த கார் தொடர்­பி­லான விசா­ர­ணையில் பின் தொடர்ந்த வாக­னத்தை பொலிஸார் அடை­யாளம் கண்­டுள்­ள­துடன் தற்­ச­மயம் அது தொடர்­பி­லான மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

அத்­துடன் வஸீமின் கொலை­யா­ளிகள் யார் என்­பதைக் கண்­ட­றிய கொலை இடம்­பெற்ற தின­மான கடந்த 2012 மே மாதம் 17 ஆம் திகதி அதி­காலை முதல் கட்­டு­நா­யக்க விமான நிலையம் ஊடாக வெளி­நாடு சென்­றோரின் பெயர்ப் பட்­டி­ய­லையும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்ற அனு­ம­தி­யுடன் பெற்று மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந் நிலையில் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கார வழக்கு கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது, நீதி­மன்­றுக்கு சிறப்பு விசா­ரணை அறிக்­கை­யொன்­றினை தாக்கல் செய்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் விம­ல­சிறி ரவீந்ர கடந்த 14 நாட்­க­ளுக்குள் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் நிலை­மையை தெளி­வு­ப­டுத்­தினார்.

இதன் போது, கடந்த வாரம் வஸீம் தாஜு­தீனின் மூத்த சகோ­த­ர­ரி­டமும் சகோ­த­ரி­யி­டமும் சிறப்பு வாக்கு மூலங்­களை குற்றப் புல­னாய்வுப் பிரிவு பெற்­ற­தா­கவும் இதனை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் அவர்மன்­றுக்கு அறி­வித்­தார்.

வஸீம் தாஜுதீன் கொலை செய்­யப்­பட்ட போது வெளி நாட்டில் இருந்த அவ­ரது சகோ­தரர் இறுதிச் சடங்கில் கலந்­து­கொள்ள இலங்கை வந்த போது, அப்­போது நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த சுமித் சம்­மிக்க பெரே­ரா­வுடன் விசா­ர­ணை­க­ளுக்­காக சென்­றுள்ளார்.

இதன் போது தற்­போது தாஜுதீன் விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா, வஸீமின் கொலைக்கு பின்னால் யுவதி ஒருவர் தொடர்­பி­லான பிரச்­சினை உள்­ள­தா­கவும், அதனால் அது தொடர்பில் தேட வேண்டாம் எனவும் கூறி­யுள்ளார். இந் நிலையில் வஸீமின் சகோ­தரர் மீள வெளி­நாடு சென்­றுள்ள நிலையில் அண்­மையில் நாட்­டுக்கு வந்து சுமித் சம்­பிக்க பெரேரா தன்­னிடம் கூறிய விட­யங்­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு தெரி­வித்­துள்ளார்.

எனவே சுமித் சம்­பிக்க பெரே­ரா­விடம் இது தொடர்பில் வாக்கு மூலம் பெற வேண்­டி­யுள்­ள­தாக புல­னாய்வுப் பிரிவு மன்­றுக்கு அறி­வித்­தது. இதனை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்றம் அவ­ரிடம் வாக்கு மூலம் பெற அனு­மதி வழங்­கி­யது.

இத­னை­விட இந்த விவ­கா­ரத்தின் மற்­றொரு சந்­தேக நப­ரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­கவும் புல­னாய்வுப் பிரி­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ள­தா­கவும் அத­னூ­டாக தனக்கு விஷேட வாக்கு மூலம் ஒன்­றினை வழங்க வேண்டி உள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு மன்றுக்கு அறிவித்தது.

இதற்கு அனுமதியளித்த நீதிவான் அவரிடம் வாக்கு மூலம் பெற உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது அன்றைய தினம் வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -