திருகோணமலை : குளிர் தாங்க முடியாமல் மாணவன் வைத்தியசாலையில்.!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை. மஹாதிவுல்வெவ சிங்கள மஹா வித்தியாலயத்தில் 06ம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் குளிர் தாங்க முடியாமல் மயக்கமுற்ற நிலையில் இன்று (01) காலை மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மொறவெவ- 06ம் வட்டாரத்தைச்சேர்ந்த எம்.கே.ஜி.ஹஸான் (10 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவன் வழமை போல் இன்று பாடசாலைக்கு வருகை தந்த போது வகுப்பில் குளிர் என கூறிக்கொண்டு இருந்ததாகவும் அதனையடுத்து சிறிது நேரத்தின் பின்னர் மயக்கமுற்றதாகவும் தெரியவருகின்றது.

சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்த வண்ணம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -