கலகம் அடக்கும் பொலிஸ் ஒருவரே ரஸ்யா தூதுவரைச் சுட்டுக்கொண்டார்

நேற்று (19) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் துருக்கியின் பொலிஸ் அதிகாரி ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 வயதான குறித்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு, "அல்லாஹ் மிகப் பெரியவன், சிரியாவை மறந்துவிடாதீர்கள், அலப்போவை மறந்துவிடாதீர்கள்" என சத்தமாக கத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியர்களின் பார்வையில் ரஷ்யா எனும் தலைப்பின் கீழ் இடம்பெற்ற சித்திர கண்காட்சியில் பங்குபற்றி, உரையாற்றிய காலோவ் மீது குறித்த நபர் 8 முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த நபர் அந்நாட்டு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் அலப்போ நகரில் இடம்பெறும் ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியன இணைந்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

தாக்குதல் நடத்தியவர் அங்காராவைச் சேர்ந்த கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -