யாழ் நூலகத்துக்குள் நுளைந்து பொருட்களை சேதப்படுத்திய மனநிலை பாதிக்கப்பட்டவரை பொலிசாரின் உதவியுடன் வெயேற்றிய ஊழியர்கள்


பாறுக் ஷிஹான்-

யா
ழ்ப்பாண பொதுநூலகத்திற்குள் நுழைந்த மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படும் நபர் ஒருவர் அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்தி ஊழியர்களையும் தாக்க முற்பட்டுள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் நூலகத்திற்குள் நுழைந்து குறித்த மனநிலை பாதிக்கப்பட்ட நபர் நூலகத்தில் இருந்த புத்தகங்களை எடுத்து எறிந்து அட்டகாசம் செய்ததுடன் நூலகத்திற்கு சொந்தமான உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

அத்துடன் இவரது செயற்பாட்டை தடுக்க முற்பட்ட நூலக ஊழியர்களையும் தடி ஒன்றினால் தாக்கியுள்ளார்.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன் நூலகத்தில் இருந்த வாசகர்கள் சிதறி ஓடினர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பொலிசார் குறித்த நபரினை பெரும் சிரமங்களுக்கு மத்தியல் கைது செய்து அழைத்து சென்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -