ஜனாதிபதிக்கு பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் கைது

ஜனாதிபதிக்கு பேஸ்புக் ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை சேர்ந்த டினுஷ சமீர என்ற 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேர் குறித்த இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியை சுட வேண்டும் என்ற கருத்துக்களை குறித்த இளைஞன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -