கொழும்பு – நீர்கொழும்புக்கிடையிலான ரயில் பாதையை மறித்து கல்கந்த பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் போக்குவரத்து துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை நாடுமுழுவதும் சேவை பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் நீர்கொழும்பு - கல்கந்தை பகுதியில் சிலர் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் பாதையை விட்டு அகன்றுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் குறித்த நபர்கள் தொடர்ந்து ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதோடு 18 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபர்களை நீர்கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -