காத்தான்குடி SP மற்றும் அஜந்தா வீதிகளில் கழிவு நீர் - பொறியியலாளர் ஷிப்லி பாறுக் துரித நடவடிக்கை

எம்.ரீ.ஹைதர் அலி-
காத்தான்குடி SP வீதியில் கழிவு நீர் செல்லுகின்ற குழாய்களுக்குள் அடைப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கழிவு நீர் நிரம்பி வழிந்து SP வீதி மற்றும் அஜந்தா வீதி என்பன கழிவு நீர் தேங்கி காணப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதோடு, இவ்வீதியால் பயணிப்பவர்கள் மிகவும் அசௌகரியங்களையும் எதிர்கொள்கின்றனர்.

(2016.11.08ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை) குறித்த வீதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் நிலைமையினை நேரில் பார்வையிட்டதோடு, நகரசபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரை உடனடியாக தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு இப்பிரச்சினையினை நிவர்த்தி செய்வதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -