தேர்­தலில் மில்­லியன் கணக்­கா­னோர் சட்­ட­வி­ரோ­த­மாக வாக்­களித்துள்ளனர் - ட்ரம்ப்

மீள் வாக்கு எண்­ணிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்­துள்ள டொனால்ட் ட்ரம்ப், ஜனா­தி­பதித் தேர்­தலில் மில்­லியன் கணக்­கா­னோர் சட்­ட­வி­ரோ­த­மாக வாக்­களித்துள்­ள­தாக குற்றஞ் சுமத்­தி­யுள்ளார்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்பை விட, ஹிலாரி கிளிண்டன் 20 இலட்ச கூடுதல் வாக்­கு­களை பெற்றார். ஆனால் ட்ரம்ப் தேர்தல் கல்­லூ­ரியில் கூடு­த­லான வாக்­கு­களைப் பெற்றதை­ய­டுத்து புதிய ஜனா­தி­ப­தி­யாக ட்ரம்ப் அறி­விக்­கப்­பட்டார்.

இந்த நிலையில் வாக்கு எண்­ணிக்­கையில் முறை­கேடு நடந்­துள்­ள­தா­கவும் எனவே மீள் வாக்கு எண்­ணிக்கை நடத்­தும்­படி கிரீன் கட்சி வேட்­பாளர் ஸ்டெயின், விஸ்­கொ­ன்ஸின் மாநிலத்தில் மனு செய்­துள்ளார். மிச்ஸி­கன், பென்சில்வேனி­யா­விலும் மீள் வாக்கு எண்­ணிக்கை கோர இருப்­ப­தா­கவும் அவர் கூறி­யுள்ளார், இவ­ருக்கு ஹிலா­ரியின் ஜன­நா­யக கட்­சி­யினர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

ஆனால் இதை ட்ரம்ப் எதிர்த்­துள்ளார். தேர்­தலில் எனது வெற்றி ஒப்புக் கொள்­ளப்­பட்­டது. தற்­போது மீள் ­வாக்கு எண்­ணிக்கை விவ­கா­ரத்தில் ஊழல் நடந்­துள்­ளது என தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் டுவிட்­டரில் தனது கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்ளார். அதில் தேர்­வா­ளர்­களின் வாக்­குகள் மூலம் நான் சுல­ப­மாக வெற்றி பெற்றேன். அதே நேரத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக சேர்க்­கப்­பட்­டுள்ள வாக்­கு­களை நீக்­கி­யி­ருந்தால் மக்கள் வாக்­கு­க­ளிலும் நான் வெற்றி பெற்றிருப்பேன். நான் 3 அல்­லது 4 மாநி­லங்­களில் மட்­டுமே பிர­சாரம் செய்தேன். 15 மாநி­லங்கள் மற்றும் சிறிய மாநி­லங்­களில் தேர்தல் பிர­சாரம் மேற்கொள்­ள­வில்லை. அனை த்து இடங்­க­ளிலும் பிர­சாரம் செய்­தி­ருந்தால் மக்கள் வாக்­கு­க­ளிலும் சுல­ப­மாக வெற்றி பெற்றிருப்பேன் என தெரி­வித்­துள்ளார்.

மேலும் விர்­ஜீ­னியா, நியூ ஹாம்ஷயர், மற்றும் கலி­போர்­னியா மாநி­லங்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக வாக்­குகள் செலுத்­தப்பட்டன. இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிடவில்லை என குற்றஞ்சு­மத்­தி­யுள்­ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -