ஓட்டமாவடியில் விபத்து : வாழைச்சேனை முஹம்மது மபாஸ் மரணம்


வாழைச்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த ஹனீபா ஹாஜியாரின் மகன் M.M.C. Food City யின் உரிமையாளர் முஹம்மது மபாஸ் (28) 2016.11.30ஆந்திகதி இன்று அதிகாலை ஓட்டமாவடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார்.
”இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்”
ஓட்டாமாவடி, ஹைராத் பள்ளி வீதியை சேர்ந்த மபாஸ் (28) என்பவர், இன்று அதிகாலை ஓட்டமாவடியில் வைத்து நடந்த கோர விபத்த்தில் காலமானார்.

கொழும்பிலிருந்து அவரது வேனில் வந்து கொண்டிருக்கும்போது, தூக்கம் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த "ஆளடியான் "டிப்பருடன் மோதியே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு அவரது மனைவியுடன் பேசும்போது, "ஓட்டமாவடி பாலத்துக்கருகில் வந்துவிட்டேன் " என்ற தகவலை சொல்லியிருக்கிறார்.

இவரோடு பயணித்த மற்றயவர் சிறு காயங்களுளுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சகோதரார் மபாஷின் ஜனாசா மட்டக்களாப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

வேன் அடையாளமே தெரியா வண்ணம் சிதைவடைந்து காணப்படுகிறது.
இவர் வாழைச்சேனை புட்சிட்டி ( MMC FOOD CITY ) ஹனீபா ஹாஜியாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -