என் சின்ன மகனுக்கே மோட்டார் சைக்கல் ஓட்ட தெரியும் என்று பீத்திக்கும் பெற்றோருக்கு -இன்றைய சோகச்செய்தி



எப்.முபாரக் -

திருகோணமலை.சேறுநுவர பொலிஸ் பிரிவுற்குற்பட்ட செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும். மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் தோப்பூர்-செல்வநகர் நூறூ வீட்டுத்திட்டம் பகுதியைச்சேர்ந்த 15-16 வயதுடையவர்கள் எனவும் தெரியவருகின்றது.

குறித்த மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்ததாகவும் இருவர் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பாக சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படங்கள்;அஸ்மி ஏறாவூர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -