திருடிய நபருக்கு பிணைக்கு கையொப்பம் இட்டவரின் நிலை..!

எப்.முபாரக்-
2016-09-28. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றினை உடைத்து பொருட்களை திருடிய நபயொருவருக்கு பிணைக்கு கையொப்பம் இட்ட நபரை அடுத்தமாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டார். திருகோணமலை,பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

திருகோணமலை பகுதியில் கடந்த வருடம் கடையொன்றினை உடைத்து பொருட்களை திருடிய சந்தேக நபருக்கு குறித்த பிணையாளர் கையொப்பம் இட்டிருந்தார். கடையை உடைத்து பொருட்களை திருடியவர் வழக்குத் தவணைகளுக்கு செல்லாது தலைமரைவாக இருக்கும் நிலையிலே பிணையாளரை செவ்வாய்கிழமை(27) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பிணையாளரை புதன்கிழமை(28) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -