யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து - 11 பேர் வைத்தியசாலையில்

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலையிலிருந்து -யாழ்ப்பாணத்திற்கு பயணிகளை ஏற்றிச்சென்ற சீடிபி பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இன்று (13) காலை 11 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பேருந்து நிலையத்தில் அதிகாலை 4.30மணிக்கு புறப்பட்ட பஸ் கன்னியா சோதனைச்சாவடிக்கு அருகில் வளைவில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -