அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைக்கு வருகிறது..!

மெரிக்கக் கடற்படையின் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் ( ஏ.எஸ்-40) கப்பல் 500 மாலுமிகளுடன் நாளை கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இந்த ஆண்டில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் மூன்றாவது அமெரிக்கப் போர்க்கப்பல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

வழக்கமான எரிபொருள் நிரப்பும் பயணமாக கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாகவும் இந்த வருகை சாதாரண ஒன்றாக அமைந்திருப்பதாகவும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. 

இதேவேளை இலங்கைக்கு வந்தடையும் யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் (ஏ.எஸ்-40) போர்க்கப்பலில் 500 மாலுமிகள் வரை பணியாற்றுகின்றனர். இவர்கள் சுமார் ஒருவார காலம் இலங்கை தரையில் விடுமுறையைக் கழிக்கவுள்ளதாகவும் இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்கத் தூதரக அறிக்கை கூறுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -