சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்..!

சுகாதார அமைச்சுக்கு மேலும் ஒரு பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹீபால உட்பட வைத்திய நிருவாக அதிகாரிகள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைக்கு இன்னுமொரு பணிப்பாளர் தேவையில்லையென இவர்கள் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

ஒரு வருடத்துக்கு 100 பில்லியன்களுக்கு அதிகளவில் செலவு செய்யும் அமைச்சுக்களுக்கு புதிதாக நிதி மற்றும் கணக்கு தொடர்பான பணிப்பாளர் நாயகங்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்தே இந்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -