பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஆட்சியின் போது ரோஹித அபகுணவர்த்தன கப்பல் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் குறித்த அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இன்றைய தினம் பாரிய ஊழல் மற்றும் மோசடி விசாரணை செய்யும் ஜனாதிபதியின் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.