திருகோணமலையில் டிப்ளோமா பயிற்சி நெறி...!

திரு­கோ­ண­மலை மாவட்டப் பாலர் பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கான டிப்­ளோமாபயிற்சிநெறிக்கா­ன அங்குராப்பண வைபவம் திரு­கோ­ண­மலை ரோட்டரிக்கழக நிதி­யு­த­வி­யு­டன் ஆரம்­பிக்­கப்­பபட்டது..

இதன் ஆரம்ப நிகழ்வு 20 ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு திரு­கோ­ண­மலை ரோட்டரிக்கழகக் கேட்போர் கூடத்தில் நடை­பெற்றது.. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்­டா­யு­த­பானி பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்து சிறப்பித்தார்.. ரோட்டரிக்கழக நிதி­யு­த­வி­யு­டனும் ஆறுதல் நிறு­வ­னத்தின் நடை­மு­றைப்­ப­டுத்­த­லு­டனும், இக் கற்கை நெறிஇடம்பெற­வுள்­ளது.

80 ஆசி­ரி­யர்­க­ளுக்­கான இப் பயிற்சி மூதூர் ,திரு­கோ­ண­மலை ஆகிய பிர­தே­சங்­களில்நடை­பெறும்.

இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக முன்னாள் ஆளுநர் திரு தர்சன் ஜோன், கிழக்கு மாகாண முன் பள்ளி அமையப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம், திரு­கோ­ண­மலைமுன் பள்ளி இயக்குனர் திரு ச வரதசீலன் மற்றும்முன் பள்ளி அமைய வளவாளர்களும்,கலந்து கொண்டார்கள்..

இவ் வைபகத்துக்கு திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் திரு ச சிவசங்கர் அவர்கள்தலைமை தாங்கினார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்­டா­யு­த­பானி தமது உரையில்பாலர் பாட­சாலை ஆசி­ரி­யர்­க­ளுக்கான டிப்­ளோமா பயிற்சிநெறியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அவர்களது எதிர்கால சுபிட்சத்தை முன்னிட்டு ஒழுங்காக பங்கு பற்றும்படி எடுத்துரைத்தார்.

இறுதியாக திருகோணமலை றோட்டரிக் கழக பொது உறவு தலைவர் டாக்டர் ஈ. ஜீ.ஞானகுணாளன் நன்றிஉரை நிகழ்தினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -