மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்..!

ட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் - உறுப்பினர்கள், மாவட்ட திணைக்ளங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். 

இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றம் - பின்னடைவு அதற்கான காரணங்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - தேவைகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளது. 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -