சப்னி அஹமட், அபு அலா-
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நேற்று (01) அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான "வீட்டுக்கு வீடு மரம்" வேலைத்திட்டத்திம் கிழக்கு மாகாண சுகாதா அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நசீரினால் அட்டாளைச்சேனை பிரதேசம் முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, வீடுகள் அலுவலகங்கள், வீதிகள் மற்றும் மைதானங்கள் என பல இடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் போராளிகளினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.