பொரளஸ்கமுவ : முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல்

பொரளஸ்கமுவ பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றுக்கு இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (06) அதிகாலை ஒரு மணியளவில் பள்ளிவாசலுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பள்ளிவாசலின் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.

அதேவேளை பள்ளிவாசலின் பணிபுரியும் ஒருவருக்கும் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் இஸ்தலத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -