ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் மௌலவியா பட்டமளிப்பு விழா - 2016

எம்.ஜே.எம்.சஜீத்-
நீங்கள் கற்றுக்கொண்ட கல்வியை மையமாக வைத்து அதன் அடிப்படையில் உங்களுடைய ஒழுக்கம், இபாதத் உட்பட வாழ்க்கையின் அனைத்து செயற்பாடுகளிலும் உங்கள் கல்வி பிரதிபலிக்க வேண்டும் என ஜம்மியத்துல் ஷபாபின் பணிப்பாளர் அஷ்ஷெக் முகம்மட் ரஷீத் முகம்மட் ஷரிப் ( றியா) அவர்கள் தெரிவித்தார்.

ஒலுவில் ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரியின் இரண்டாவது மௌலவியா பட்டமளிப்பு விழா முகாமைத்துவ சபையின் தலைவர் ஏ.எல். முகம்மது முஸ்தபா தலைமையில் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

இதில் 105 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்றதுடன் திறமைச் சித்தி பெற்ற மௌலவியாக்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், அறபுக்கல்லுரியின் அதிபர் உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -