வேனுடன் பஸ் மோதி விபத்து - 12 பேர் படுங்காயம்

க.கிஷாந்தன்-
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவளை பிரதேசத்தில் 28.08.2016 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுங்காயங்களுக்குள்ளாகிய நிலையில் கினிக்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அட்டனிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நாவலபிட்டியிலிருந்து வட்டவளை நோக்கி வந்த வேனும் கினிகத்தேனை கடவள பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பஸ்ஸில் பயணித்த 9 பேரும், வேனில் பயணித்த 3 பேரும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். பஸ் முறையற்ற ரீதியில் பயணித்ததாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகவும், பஸ் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -