அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கிளிநொச்சி நகரில் அமைந்திருக்கின்ற ஜேர்மன் தொழில் நுட்ப கல்லுரியின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்
இன்று 10.07.2016 காலை கிளிநொச்சி விஜயம் செய்த திறன்கள் விருத்தி அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கிளிநொச்சி நகரில் அமைந்திருக்கின்ற ஜேர்மன் தொழில் நுட்ப கல்லுரியின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
எதிர்வரும் 18.07.2016 ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள ஜேர்மன் தொழில் நுட்ப கல்லுரியின் வளங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்ட்ன இங்கு கருத்து தெரிவித்த அங்கஜன் ராமநாதன் எதிர் காலத்தில் இளைஞர் யுவதிகளின் வினைத்திறனை ஊக்குவிக்கும் முகமாக இக்கலூரி அமைந்திருக்கின்றது எனவும் இங்கு ஆரம்பிக்கவுள்ள இந்த தொழில் நுட்ப கல்லூரியானது எமக்கு கிடைத்திருக்கின்ற பெரும் வளம் எனவும் இதனை பயன்படுத்தி நாம் சிறந்த கல்விமான்களாக வருவதுடன் வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக எமது மாணவ சமுதாயம் உருவாக வேண்டும் எனவும் தெரிவித்தார்.