மிக வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு குறித்து மக்களின் கவனத்தைத் திருப்பும் ஒரு நடவடிக்கையாகவே அரசியல்வாதிகளைக் கைது செய்யும் நடவடிக்கை இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகளையே கைது செய்து வருகின்றனர். இன்று யார் கைது செய்யப்படுகின்றார். நாளை யார் கைது செய்யப்படப் போகின்றார். அவரைப் பிடிப்பாரா? இவரைப் பிடிப்பாரா? என மக்கள் நினைப்பதற்கு இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் ஒரு சதியே இந்த கைதுகளாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.