அடுத்து கைது செய்யப்படப் போவது நானே. வாய் இருப்பதாயின் டொலர்களுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு எதனைத் தான் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறைப்படுத்தப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் சுகதுக்கங்களை விசாரிக்க மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அடுத்து தங்களது மனைவி சிராந்தி ராஜபக்ஷவைக் கைது செய்யப் போவதாக தெரிவிக்கப்படுகின்றது, இது குறித்து தங்களது கருத்து என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.