திருகோணமலை மாவட்டத்தில் ஒசுசல மருந்து விற்பனை நிலையமொன்றைத் திறக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கொரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் அமைச்சரை நேரில் சந்தித்த இம்ரான் எம்.பி திருகோணமலை மாவட்டத்தில் ஒசுசல மருந்து விற்பனை நிலையம் இல்லாததால் இப்பகுதி மக்கள் மருந்துகளை நியாய விலையில் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும்சில மருந்துகளைப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
எனவே. திருகோணமலை மாவட்ட மக்களின் நன்மை கருதி ஒசுசல மருந்த விற்பனை நிலையமொன்றை இம் மாவட்டத்தில் திறந்து வைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அமைச்சரிடம் முன் வைத்தார்.
இதனை செவிமடுத்த அமைச்சர் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக வாக்குறுதி அளித்ததோடு இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.