ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு ஒருதொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு...!

ஏ.எம்.றிகாஸ்-
றாவூர் ஆதார வைத்தியசாலைக்கு ஒருதொகுதி தளபாடங்களை கையளிக்கும் நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் எம்எச்எம் தாரிக் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இத்தளபாடங்களைக் கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு நிதியிலிருந்து இந்த தளபாடங்கள் கௌவனவு செய்யப்பட்டன.

பல தசாப்த கால பழைமைவாய்ந்த ஏறாவூர் வைத்தியசாலை காலத்திற்குக் காலம் தரம் உயர்த்தப்பட்டபோதிலும் வைத்தியர்களுக்கான தளபாடங்கள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுடனேயே இயங்கிவருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

வைத்திய நிபுணர் சமிந்த கோட்டகே மற்றும் வைத்தியர் எச்எம்எம் மௌஜுத் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை பாராளுமன்ற அலி ஸாஹிர் மௌலானா தையல் இயந்திரம் ஒன்றையும் வைத்தியசாலைக்குக் கையளித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -