ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக சாதணை படைக்கும் - அறபா வித்தியாலய அதிபர் அன்சார்

அபு அலா -
ந்த வித்தியாலயத்தில் கல்விபயின்று வெளியான பழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் இது எமது பாடசாலை இதனை நாமே பார்க்கவேண்டும் என்ற சிந்தனையில் செயற்படுவார்களானால் இந்த பாடசாலை ஓரிரு வருடங்களின் பின்னர் தேசிய ரீதியாக பல சாதனைகளை படைத்து ஒரு முதன் நிலை பாடசாலையாக சிறந்து விழங்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளுக்கும் இடமே இல்லை என வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.அன்சார் கூறினார். 

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 1999 ஆம் ஆண்டு க.பொ.தர சாதாரண தரத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் ஒரு தொகுதி பூங்ன்றுகளை சாடியுடன் இன்று (25) வித்தியாலத்தின் அதிபர் எம்.ஏ.அன்சாரிடம் கையளித்து வைக்கும் நிகழ்வின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த பாடசாலையில் கல்விபயின்று வெளியேறிய மாணவர்கள் பிரதேச செயலாளராகவும், நிருவாக மாகாண பிரதிப் பணிப்பாளராகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிப் பணிப்பாளராகவும், வலயக் கல்வி பணிப்பாளராகவும், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாகவும், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களாகவுகவும் இன்னும் பல அரச சேவையில் பல உயர்பதவியில் வகிக்கின்றார்கள். இவர்களின் பார்வைகளும் இப்பாடசாலை மீது படுமாக இருந்தால் இப்பாடசாலையின் பாதை இன்னும் இன்னும் பல வெற்றி இலக்குகளை அடைய முன்னெறிச் செல்லும் என்றார்.

1999 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் இந்தப் பாடசாலை நமது பாடசாலை இதை நாமே பார்க்கவேண்டும் இந்தப் பாடசாலையை நாமே அழகுபடுத்தி பார்க்கவேண்டும் என்ற நற்சிந்தனையில் அவர்கள் தாமாகவே இன்று ஒரு தொகுதி பூக்கன்றுளை சாடியுடன் அன்பளிப்புச் செய்திருந்தமையை நான் பாராட்டியே ஆகவேண்டும் இவர்களைப்போன்று மற்றய பழைய மாணவர்களும் முன்வரவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -