தென்கிழக்கு பல்கலையில் ஆங்கில மொழி கற்பித்தலில் விஷேட பட்டப்படிப்பு..!

எம்.வை.அமீர் -
லங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் களனி பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆங்கில மொழிகற்பித்தலில் விஷேட பட்டப்படிப்பை அண்மையில் ஆரம்பித்து வைத்தது.

பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிப்பிரிவின் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் தென்கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

நிகழ்வுக்கு விஷேட அதிதிகளாக பொறியியல், கலை மற்றும் வர்த்தக பிரிவு பீடாதிபதிகள் கலந்துகொண்டதுடன் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் உள்ளிட்ட விரிவுரையாளர்களும் துறைசார்ந்தோரும் கலந்து கொண்டனர்.

குறித்த பாடநெறிக்கு இப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் உள்வாரி மாணவர்களில் போட்டிப்பரீட்சை மூலம் தெரிவாவோர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -