எம்.ஐ.எம். நாளீர்-
தேசிய திறனபிவிருத்தி தின விழாவும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 15.07.2016 ம் திகதி வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விழா மண்டபத்தில் கல்லூரி அதிபர் ஏ.ஜனூர்டீன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகளின் பிரதம அதிதியாக அம்பாரை தொழில் நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் ஏ.எல். பதுர்தீன் அவர்களும், சிறப்பதிதியாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் அவர்களும் , கல்லூரியின் பதிவாளர் ஐ.பியாஸ், பிரதி அதிபர் எஸ்.எச்.எம். சல்மான், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். பிஸ்ரின் உள்ளிட்ட கல்லூரியின் கல்விசார், மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தரகளும், பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.