அத்துடன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்த நாடுகளில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் தம்மை பதிவு செய்வது கட்டாயம் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாத தாக்குதல்களில் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போதே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன இதனைத்தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் போது இலங்கையர்களை அறிவுறுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதனை இலங்கையர்கள் கருத்திற்கொள்வார்களானால் அவர்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஏதாவது ஓர் நாட்டில் தாக்குதல் சம்பவம் ஏற்படுமாயின் உடனடியாக இலங்கை தூதுவராலயம் ஊடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இதன் காரணமாகவே வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் தம்மை தூதுவராலயங்களில் பதிவு செய்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.