கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் கௌரவ கிழக்கு மாகாண முதல் அமைச்சரால் அவரது அமைச்சின்கீழ் இயங்கும் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சுமார் 8.5 மில்லியன் ரூபா செலவில் 01 கி.மீ வரையிலான காங்க்ரீட் வீதிக்கு நிதி ஒதுக்கபட்டுள்ளது.
குறித்த வீதியை கிழக்கு மாகாண கிராமிய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு.நிர்மலன் தொழில்நுட்ப அதிகாரி குறித்த பகுதிக்கான கிராம சேவகர் திரு.அபூல் உட்பட குறித்த பகுதியின் பள்ளிவாயல் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.