​போதையை ஒழிப்போம் நடை பவணி...!

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - கோமரங்கடவெல சிவில் பாதுகாப்பு திணைக்களமும்-மொறவெவ பொலிஸாரும்- மஹதிவுல்வெவ சிங்கள மஹா வித்தியால மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள போதையை ஒழிப்போம் எனும் நடைபவனி இன்று (13) காலை பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமானது.

"கிராமங்களில் போதைகளை இல்லாதொழிப்போம" 

"வாழ்வை செழிப்படையச்செய்வோம்"

போதைகளை வழங்கி குடும்பத்தை பாழாக்காதே போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் மொறவெவ பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளினூடாக மக்களுக்கு விழிப்பூட்டியதுடன் கடைகளில் சிகரெட்டுக்களை விற்க வேண்டாம் எனவும் மாணவர்கள் கடை உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிகழ்வில் மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க -சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கோமரங்கடவெல பிரதேசத்திற்குப் பொறுப்பாளர் கேணல் திலகரட்ண மஹதிவுல்வெவ சிங்கள மஹா வித்தியாலயத்தின் அதிபர் எம்.தர்மசேன மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் உரையாற்றிய சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பாளர் கேணல் திலகர்ண -தற்பொழுது எமது ஊழியர்களின் குடும்பங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு மதுப்பாவனைகளை தவிர்த்து வருகின்றோம். ஆனாலும் சில வீடுகளில் பெண்கள் கட்டாயம் விஷேட நிகழ்விற்கு மதுபானங்களை வாங்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த காலங்களில் விஷேட நிகழ்வுகளின் போது மதுபானங்கள் கட்டாயம் வழங்கப்பட்டமையினால் தற்பொழுது வழங்காவிட்டால் உறவினர்கள் கோபிக்க கூடிய நிலமை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அப்படியான சிந்தனைகளை மாற்ற வேண்டும்.மதுபானத்தினால் ஏற்படுகின்ற விளைவுகளை பற்றி நாம் விளக்கப்படுத்த வேண்டும். இவ்வாறான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் விழுப்புணர்வுகளை ஏற்படுத்தவுமே எமது திணைக்களத்தில் ஒரு குழுவொன்றினை அமைத்திருக்கின்றோம்.

கிராம மட்டங்களில் போதைப்பொருற்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. இதனை கட்டுப்படுத்தவும் இல்லாமல் ஒழிக்கவுமே நாம் பாடசாலை மாணவர்களின் ஊடாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு படுத்தி வருகின்றோம். அனைவும் ஒன்று பட்டு போதைப்பொருற்களை ஒழிக்க முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -