இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானில் சென்று இலவசமாக படிப்பதற்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
2016 ஆம் கல்வியாண்டுக்கே இவ்விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரண தரம், மற்றும் உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
பாகிஸ்தான் அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் கொழும்பிலுள்ள தனது உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் இந்தப் புலமைப் பரிசில்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இந்தப் புலமைப் பரிசிலைப் பெற்று அந்நாட்டில் சுமார் 1300 இற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். கடந்த 11 வருட காலப்பகுதியில் இந்த மாணவர்களின் படிப்புக்காக மாத்திரம் பாகிஸ்தான் அரசு 43 மில்லியன் ரூபாயை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.