கிழக்கு மாகாண கல்வி அமைச்சு,மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழு வியாழக்கிழமை(26ஆம் திகதி நாளை) அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு கல்வி நடவடிக்கைகள்தொடர்பாக ஆராயவுள்ளதாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.
மேற்படி இவ்விஜயத்தில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண கல்விப்பணிப்பாளர்என்.ரீ.எம்.நிசாம், கல்வியமைச்சின் செயலாளர் அசங்க அபேவர்த்தன மற்றும் கல்வியமைச்சின்உதவிச்செயலாளர்கள், மேலதிக மாகாணப் பணிப்பாளர்கள், மாகாண கல்வித் திணைக்கள பிரதம கணக்காளர்பீ.கேதீஸ்வரன், பாடங்களுக்குப் பொறுப்பான பிரதி, உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், அமைச்சின்அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் விசேட செயற்றிட்டத்திற்கமைவாக மாகாணத்திலுள்ள கல்வி வலயங்களுக்குநேரடி விஜயம் மேற்கொண்டு கல்விச்செயற்பாடுகளை மதிப்பிடுகின்ற விஜயத்தின் ஒரு கட்டமாகவே அக்கரைப்பற்றுவலயத்திற்கான இவ் விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -