கிழக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி பாடசாலைகளில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்...!

எம்.ரி.எம்.யூனுஸ்-
காத்தான்குடி ஸாவியா வித்தியாலய வகுப்பறை கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலய அதிபர் இஸ்ஸதுல் நயீமா அப்துல் ஸலாம் தலைமையில் இன்று 30.06.2016 திங்கட்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வகுப்பறை கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலயத்தில் நடை பெற்றது.

அத்தோடு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 3 மாடி கட்டடத்திற்கான ஆரம்ப நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்றது.

அதிதிகளாக முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி, நகரசபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கு 55 இலட்சம் ரூபா செலவில் இருமாடிகளைக் கொண்ட வகுப்பறைக் கட்டிடத்திற்கான ஆரம்ப நிகழ்வு தடைப்பட்டமை என்பதும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -