ஜனாதிபதியின் கண்ணியமான அதட்டலுக்கு உட்பட்ட சரத் பொன்சேகா...!

பீல்ட் மார்சல் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியின் கண்ணியமான அதட்டலுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது அமைச்சுக்கு 35 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஒரு பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ய 40 மில்லியன் ரூபாய்கள் தேவை.

இந்தநிலையில் தமது அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள பணத்தை பார்த்தால் இன்னும் 5 மில்லியன் ரூபாய்கள் பென்ஸ் வாகனத்தை கொள்வனவு செய்ய தேவைப்படும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, குறித்த கோரிக்கையை பின்னர் ஆராயலாம் என்று குறிப்பிட்டார்.

நல்லாட்சியில் பென்ஸ் வாகனங்களை கொண்டு மக்கள் காப்பாற்ற முடியாது.

நாடு இன்று பொருளதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனது. இந்தநிலையில் அமைச்சர்கள் தமது ஆசனப்பட்டிகளை நிலத்திலும் வானத்திலும் இறுக்கிக்கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -