சுலைமான் றாபி-
நிந்தவூர் பிரதான வீதியில் இன்று (19) இடம்பெற்ற வாகனவிபத்தில் ஆலிம் வீதி, மாளிகைக்காடு மத்தியைத் சேர்ந்த ஏ.ஆர்.றமீஸ் (27) என்பவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது JK 5360 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த வேளை பிறிதொரு மோட்டார் சைக்கிள் வந்த நபரினால் விபத்துக்குள்ளாக்கப்பட்ட வேளையிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுக்கிறது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு பிறிதொரு மோட்டார் சைக்கிள் வந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதே வேளை இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.